
ரிவ்யூ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது நடுவர்களின் முடிவுகள் பேசுப்பொருளாகியுள்ளது. குறிப்பாக ரோகித் மற்றும் ரஹானே குறித்த ரிவியூக்களில் அவர்கள் எடுத்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளது.

ரோகித் அவுட்
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, ஜாக் லீச்சின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பின்னர் அவரின் கால் கோட்டிற்கு உள்தான் இருந்தது என கள நடுவர்கள் தெரிவித்தனர். ஆனால் ரீப்ளேவில் அவரின் கால் முழுமையாக கோட்டிற்குள் இல்லாதது தெரியவந்தது.

ரஹானேவும் அவுட்
ஜாக் லீச் வீசிய பந்தில் ரஹானேவின் பேட்டிற்கு அருகில் பந்து சென்று கீப்பர் கேட்ச் ஆனது. இதற்காக 3வது நடுவரிடம் ரிவ்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் சரிவர ரீப்ளே பார்க்காததால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் பந்து க்ளௌவுஸில் பட்டு சென்றது தெரியவந்தது.

இணையத்தில் விமர்சனம்
நடுவர்களின் இந்த செயலால் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் நடுவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாரபட்சம் பார்ப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications