ஐபிஎல்: சச்சின், கங்குலிக்கு கிடைத்த கவுரவம் டிராவிட்டுக்கு கிடைக்காதது ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: 1990களில் இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்கிய சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன், சேவாக் ஆகிய ஐவரையும் நேற்று நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடக்க விழாவின்போது ஐபிஎல் நிர்வாகம் சார்பாக கவுரவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டிராவிட் தவிர்த்த மற்ற நால்வரும்தான் நேற்றைய பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
டிராவிட் ஏன் வரவில்லை, அவரை உரிய முறையில் அழைக்கவில்லையா என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் டிராவிட் வராததற்கு காரணம், விமானத்தால் ஏற்பட்ட தாமதம் என தெரியவந்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஆலோசகராக செயல்படும் டிராவிட், டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் வருவதாக இருந்தது. ஆனால் புயல் எச்சரிக்கையால் விமானம் தாமதமானது. இதனால் அவர் பாராட்டு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
Story first published: Thursday, April 6, 2017, 17:04 [IST]
Other articles published on Apr 6, 2017


Click it and Unblock the Notifications