மும்பை : ஐ.பி.எல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டி அதாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும்.

லீக் ஆட்டங்களில் துவக்க வீரராக களம் இறங்கிய பிரன்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகியிருப்பது சென்னைக்கு பலவீனமாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் ஹஸ்ஸி இன்று களம் இறங்க உள்ளார்.