உத்தப்பா- சர்ப்ராஸ்கான் மோதல்
இந்த ஆட்டம் முடிந்த போது பெங்களூரு இளம் வீரர் சர்ப்ராஸ் கானுக்கும், கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பாவுக்கும் இடையே தகராறு நடந்திருக்கும் விவகாரம் வெளியே வந்தது.
சட்டையை பிடித்து உலுக்கி..
சர்ப்ராஸ் கானின் சட்டை காலரை பிடித்து உத்தப்பா உலுக்கியதாகவும், அதைத் தொடர்ந்து பெங்களூரு வீரர்கள் டிவில்லியர்ஸ், அசோக் திண்டா ஓடிவந்து உத்தப்பாவை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் போட்டி நடுவர் ஸ்ரீநாத் முன்னிலையில் உத்தப்பா மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் சர்ச்சை முடித்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனக்கு அது போன்று எந்த புகாரும் வரவில்லை என்று ஸ்ரீநாத் மறுத்துள்ளார்.
உத்தப்பா செய்தது சரி..
இதனிடையே இந்த பிரச்சினை குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தப்பாவின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். நானும் மைதானத்தில் ஆக்ரோஷமாகத்தான் இருப்பேன்.
சரி விட்டுவிடுங்க..
மைதானத்திற்குள் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆக்ரோஷமாக இருந்து தான் ஆக வேண்டும். அதுவும் ஐ.பி.எல். போட்டிகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான்.
இதை ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்த வேண்டாம், விட்டு விடுங்கள்.
இவ்வாறு காம்பீர் கூறினார்.