For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் லாஸ்ட் வார்னிங்.. ஒழுங்கா பந்த போடனும்.. நரீனுக்கு பி.சி.சி.ஐ இறுதி எச்சரிக்கை!

By Veera Kumar

மும்பை: கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் பந்துவீச்சு, சர்ச்சைக்குறியதாக இருப்பதாக கூறி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆஃப் ஸ்பின் வீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சில போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக நரீன் விளையாடவில்லை.

IPL 2015: Sunil Narine gets 'final warning', cleared to bowl again

இந்நிலையில், சுனில் நரீனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து அவரை மீண்டும் பந்து வீச பி.சி.சி.ஐ. அனுமதியளித்துள்ளது. இன்னொரு முறை சுனில் நரீனின் பந்து வீச்சு, விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தால் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொல்கத்தாவில் இன்றிரவு நடைபெறவுள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் சுனில் நரீன், இதுவரை 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்புத் தொடரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 7, 2015, 16:56 [IST]
Other articles published on May 7, 2015
English summary
Kolkata Knight Riders' spin bowler Sunil Narine was today cleared to bowl his off-spinners in the Indian Premier League 2015 (IPL 8). However, he was given a "final warning" by the BCCI.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+