தொடர்ந்து 4 தோல்வி.. டாஸ் போட வேறு யாரையாவது அனுப்புவாரா கோஹ்லி?
புனே: 4 போட்டிகளில் டாஸ் வெல்ல முடியாமல் தோற்றுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி.
பேசாமல் டாஸ் போட மட்டும் வேறு யாரையாவது அனுப்ப வேண்டும் என்று நினைப்பதாக கோஹ்லி கூறியுள்ளார். நேற்று இரவு நடந்த புனே அணிக்கு எதிரான போட்டியின்போது தொடர்ந்து 4வது முறையாக டாஸை இழந்த போது இவ்வாறு கூறினார் அவர்.

நேற்றைய போட்டியில் டாஸை மட்டும்தான் இழந்தார் கோஹ்லி. ஆனால், போட்டியில் பெங்களூர் அணியை எதிர்த்து மோதியை டோணி தலைமையிலான புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் கோஹ்லி அன் கோ வீழ்த்தியது.
டாஸ் போட்டு முடித்த பிறகு கோஹ்லி சிரித்தபடி கூறுகையில், முதலில் நான் வேறு யாரையாவது டாஸ் போட அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து 4வது முறையாக டாஸை இழந்துள்ளேன். இது நல்லதற்கில்லை. ரொம்ப வினோமானது என்றார் கோஹ்லி.
Story first published: Saturday, April 23, 2016, 16:46 [IST]
Other articles published on Apr 23, 2016


Click it and Unblock the Notifications