
ச்சும்மா!
இதுகுறித்து சுக்லா கூறுகையில், ரசிகர்கள் தாங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிவிக்க இது பயன்படும். ரசிகர்களின் கருத்தை அறிய இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். மற்றபடி ரசிகர்களின் தீர்ப்பு அமல்படுத்தப்படாது.

3வது நடுவரின் தீர்ப்பே இறுதியானது
3வது நடுவர் தரும் தீர்ப்புதான் இறுதியானது. அவர் சொல்வதுதான் இறுதியானது. இந்தத் திட்டத்தின் மூலம் ரசிகர்கள், போட்டியை இன்னும ஈடுபாட்டுடன் பார்த்து ரசிக்க இது உதவும் என்றார் சுக்லா.

ஏப்ரல் 8ல் தொடக்க விழா
ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் உள்ள ஒர்லியில் தொடக்க விழா நடைபெறும் என்று கூறிய சுக்லா, நடிகர்கள் ரன்வீர் சிங், காத்ரீனா கைப் உள்ளிட்ட சினிமா நடிகர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

போலீஸ் உதவி
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்கவும், ஒடுக்கவும் மகாராஷ்டிர போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சுக்லா. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்புக் கமிட்டி, ஐசிசியின் ஊழல் ஒழிப்புக் கமிட்டி ஆகியவை இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











