டெல்லி: நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் சீசனில் தன்னை மிகவும் கவர்ந்த வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 9வது சீசன் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரஹானே உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சீசனில் தன்னை மிகவும் கவர்ந்த வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ரோஹித் சர்மா என்னை மிகவும் கவரந்துவிட்டார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை தனி ஆளாக தனது தோளில் தாங்குகிறார். கோஹ்லியின் ஆட்டம் கிளாஸ். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப் போனால் அருமையாக விளையாடுகிறார்.
பவுலிங் தான் அவருக்கு கை கொடுக்கவில்லை. கோஹ்லியின் அணி பல தோல்விகள் அடைந்துள்ளது. புனே மற்றும் பெங்களூர் அணிகள் இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளன என்றார்.