சென்னை: ஐபிஎல் வரலாற்றில் பைனல் போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே. நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அந்த சாதனையை பங்கிட முயன்று தோற்றுப்போனது.
2011 ஐபிஎல் டி20 இறுதி போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

அந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிவாகை சூடியது. இந்த சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று பங்கிட்டுக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், பெங்களூர் அணி இன்று 8 ரன்கள் வித்தியாசத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்றது. இதனால் சென்னை சாதனையை சமன் செய்ய முடியவில்லை.