டெல்லி: ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.
10வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 4ம் தேதி பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த நிலையில் வீரர்கள் ஏலம் பிப்ரவரி கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலம் தாழ்த்தியதால் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பொறுப்புகளில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக நீக்கியது.
அவர்களுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் நியமித்தது. இதன் காரணமாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும், ஏப்ரல் 5ம் தேதி தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.