முக்கிய வீரர்கள் விலகினர்
லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகியோர் அவர்கள் நாட்டிலேயே உள்ளனர். ஐபிஎல் தொடரில் இருந்து காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர்கள் விலகி உள்ளனர். இந்த நிலையில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் + அனுபவம் இல்லாத வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டிகளை வென்று வருகிறார் தோனி.
முதுகு வலி
ஆனால், தோனிக்கு கடந்த சில நாட்கள் முன்பு முதுகு வலி ஏற்பட்டது. அதோடு போட்டிகளில் பங்கேற்று வந்த அவர், கடைசியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் இருந்து விலகினார். முக்கிய பந்துவீச்சாளர்களும் இல்லாமல், அதை சமாளிக்கும் திறன் கொண்ட கேப்டன் தோனியும் இல்லாமல், அந்த போட்டியில் சென்னை படுதோல்வி அடைந்தது.
நம்பிக்கை
எனவே, ரசிகர்கள் தோனி எப்போது வருவார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். சுரேஷ் ரெய்னா சென்னையின் அடுத்த போட்டியான பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்க வாய்ப்புள்ளது என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
உறுதியில்லை
ஆனால், தற்போது வந்த செய்திகளை வைத்துப் பார்த்தால், தோனி ஆடுவது இன்னும் உறுதியில்லை என்றே தெரிகிறது. தோனி ஆடுவாரா, மாட்டாரா என அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரசிகர்களின் கவலை
எனவே, தோனி அடுத்த போட்டியில் களமிறங்குவது சந்தேகமே. ஒருவேளை தோனி ஆடாவிட்டால் சென்னை அணி தோற்று விடும் என சிஎஸ்கே ரசிகர்களே புலம்பி வருகிறார்கள். முதல் சந்திப்பில் பெங்களூர் அணியை 70 ரன்களில் சுருட்டி இருந்தது சென்னை. அதற்கு பழிவாங்க காத்துக் கொண்டுள்ளது பெங்களூர் அணி. இந்த நேரத்தில் தோனி இல்லையென்றால் என்ன ஆகுமோ என்பதே ரசிகர்களின் கவலை!