தொடக்க போட்டி
23ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
போட்டி அட்டவணை
ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5ம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கான போட்டி அட்டவணையை மட்டுமே வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பு வெளியாகிறது
இதையடுத்து, அதற்கு ஏற்றபடி மாற்றம் செய்து ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ இறங்கி இருக்கிறது.
7 ஆட்டங்கள்
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் என்ற கணக்கில் தலா 7 ஆட்டம் நடத்தப்படும். லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்புக்காக இதில் மாற்றம் செய்யப்படும். ஒரே இடத்தில் பெரும்பாலான போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.