தோனி காயம்
தோனிக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு சில ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்யும் போது கடும் சிரமத்தில் இருந்தார். அதையடுத்து, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை.
தோனியின் நிலை
அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. அடுத்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி இருந்து வந்தது. தோனியின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் ஏதும் வரவில்லை.
ஓய்வு
இந்த நிலையில் தான் ஸ்ரீகாந்த் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில், உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் அளித்து, முதுகு வலிப் பிரச்சனை முழுமையாக தீரும் வரை, தோனி ஒன்றிரண்டு போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சிஎஸ்கே மற்றும் இந்தியா இரண்டு அணிகளுக்கும் நல்லது. தோனி அவசரப்படக் கூடாது என எழுதியுள்ளார்.
பாதிப்பு ஏற்படுமா?
மேலும் தோனி ஓய்வு எடுத்தால் சென்னை அணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, சென்னை அணி பிளே-ஆஃப் இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது, எப்படியும் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
எதிர்காலம்
ரசிகர்கள் தோனி வரமாட்டாரா என ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், தோனி வர வேண்டாம் அதுதான் அணிக்கு நல்லது என வித்தியாசமான கோணத்தில், எதிர்காலத்தை கருத்தில் வைத்து கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.