பந்தை காணோம்!
இடைவேளை முடிந்து பஞ்சாப் அணி பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புத் பந்து வீச வந்தார். அம்பயர் சம்சுதீனிடம் பந்தை கேட்டார். அப்போது அம்பயர் திருதிருவென விழிக்க, பந்தை காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது.
ஓடிவந்த 4வது அம்பயர்
இதனால், சில நிமிடம் விரயமனதால் வேறு வழியின்றி நான்காவது அம்பயர் புதிய பந்துகளை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தார். ஆனால், அப்போது பந்து எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட்டார் அம்பயர் சம்சுதீன்.
|
எங்கே இருந்துச்சு?
பந்து இத்தனை நேரமும் அவர் பான்ட் பாக்கெட்டில் தான் இருந்தது. ஆனால், அது தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்துள்ளார் சம்சுதீன். ஆமாம், பந்து எப்படி அம்பயர் சம்சுதீன் பாக்கெட்டுக்குள் போனது?
என்ன நடந்தது?
14வது ஓவர் முடிவில் முருகன் அஸ்வின் பந்தை அம்பயர் ஆக்சன்போர்டு-இடம் கொடுத்தார். அவர் இடைவேளையின் போது, பந்தை அடுத்த ஓவருக்கான அம்பயர் சம்சுதீனிடம் அளித்தார். சம்சுதீன் பந்தை வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
மறந்து விட்டார்
ஆனால், இடைவேளை முடிந்த பின் தான் பந்தை வாங்கியதையும், பாக்கெட்டில் வைத்துக் கொண்டதையும் மறந்து விட்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள், தலையில் அடித்துக் கொண்டு "என்னத்த செய்றது?" என போட்டியை தொடர்ந்து பார்த்தனர்.
முன்னாடி நடந்தது..
இந்தப் போட்டியின் துவக்கத்தில், பஞ்சாப் அணி வீரர் ராகுல், லைவ் டிவியில் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அடுத்து அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து நடந்தேறியது. ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!