கனவுகள்
தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ரிஷப் பண்ட், தான் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார். ஒவ்வொரு வீரரும் இந்தியாவுக்காக ஆட வேண்டும். உலகக்கோப்பையில் நம் அணிக்காக ஆடவேண்டும் என கனவுகளோடு இருப்பார்கள்.
கவனம்
அதனால், தேர்வு செய்யப்படாமல் போனது கிரிக்கெட் வீரராக ஏமாற்றமாக இருந்தாலும், தொழில்முறையில் ஏமாற்றத்தால் எதுவும் ஆகப் போவதில்லை என தெரியும். அதில் இருந்து மாறி, எனக்கு இருக்கும் வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.
தன்னம்பிக்கை
எனக்கு இன்னும் சில ஐபிஎல் போட்டிகள் உள்ளன. அதில் நன்றாக ஆடவேண்டும் என காத்திருக்கிறேன். நன்றாக விளையாடினால் தான் ஒரு நபராக, தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறினார் ரிஷப் பண்ட்.
அதிரடி ஆட்டம்
ரிஷப் பண்ட் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகாமல் போன பின், டெல்லி கேபிடல் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.