கிறிஸ் கெயில் பங்கேற்பு
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனது 34வது பிறந்த நாளை கடந்த வாரத்தில ஜமய்க்காவில் கொண்டாடினார். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் ஆட்டம் பாட்டத்துடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் பங்கேற்றார்.
கிறிஸ் கெயில் பரிசோதனை
இதையடுத்து உசேன் போல்ட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. எந்தவிதமான அறிகுறிகளும் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள போல்ட், ஆயினும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற கிறிஸ் கெயிலும் கொரோனா பரிசோதனைகளை செய்துக் கொண்டார்.
பாதிப்பு இல்லை என முடிவு
கிறிஸ் கெயிலுக்கு இரண்டுமுறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இந்த சீசனில் விளையாடவுள்ள கெயில், யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கிறிஸ் கெயில் பதிவு
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு முதல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் தற்போது இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் இரண்டிலும் நெகட்டிவ் வந்துள்ளதாகவும் கெயில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யூஏஇ பயணத்திற்கு முன்பாக தான் 2 கொரோனா டெஸ்ட் எடுத்து இரண்டிலும் நெகட்டிவ் வந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.