முதல் போட்டி
டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் வீழ்ச்சியால் திணறி வந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 39, பண்ட் 31 ரன்கள் குவித்தனர்.
பஞ்சாப் ஏமாற்றம்
எனினும், அந்த அணி 17 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எப்படியும் 130 - 140 ரன்களுக்குள் சுருண்டு விடும் என கருதியது பஞ்சாப் அணி. அப்போது களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடி 7 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார்.
அதிரடி
21 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார் அவர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அவர் 49 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது கடைசி ஓவரை வீசினார் ஸ்டோனிஸ்
கடைசி ஓவர் வீசிய ஸ்டோனிஸ்
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவை எனும் நிலையில, மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீசினார். முதல் மூன்று பந்துகளிலேயே 12 ரன்கள் கொடுத்து விட்டார். எனினும், கடைசி மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காமல், கடைசி இரண்டு பந்துகளில் 2 விக்கெட் சாய்த்தார்.
டெல்லி அணி வெற்றி
போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தன் அணியை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகசெயல்பட்டு காப்பற்றினார் ஸ்டோனிஸ். அவரது சிறப்பான செயல்பாட்டை வைத்து பெங்களூர் அணியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
நீக்கப்படும் வீரர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் வேறு அணியில் சிறப்பாக செயல்படுவார்கள் என கூறப்படுவதுண்டு. ஷேன் வாட்சன் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அதே போல தற்போது ஸ்டோனிஸ், விராட் கோலியை கேள்வி கேட்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் பெங்களூர் அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.