சிஎஸ்கே தகுதி நீக்கம்
பிளே-ஆப் சுற்றிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே தற்போது தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கே தகுதி பெறாமல் வெளியேறியுள்ள நிலையில், அடுத்த 6 அணிகளுக்குள் போட்டி மிகவும் தீவிரமாக உள்ளது. நாளைய தினம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ள நிலையில், அதில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக பிளே-ஆப் செல்லும்
முக்கிய போட்டி
இந்நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் மோதும் இரண்டு அணிகளும் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சிஎஸ்கே -பஞ்சாப் மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் பஞ்சாப் அணி, தோற்கும் பட்சத்தில் அடுத்த போட்டியில் விளையாடும் கேகேஆர் மற்றும் ஆர்ஆர் அணிகளில் வெற்றிபெறும் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. மும்பை இந்தின்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளை அடுத்தடுத்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு காணப்படுகிறது.
தொடர் தோல்விகள்
தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து இயான் மார்கனிடம் கேப்டன் பதவி கைமாறியதில் இருந்து நிலையற்ற நிலையில் கேகேஆர் அணி காணப்படுகிறது. கடந்த இரு போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளிடம் கேகேஆர் தோல்வியுற்றுள்ள நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.