
சூதாட்டங்கள்
இந்த நிலையில், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் ஆன்லைன் சூதாட்டங்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகி வருகிறது. அதனால், சிலர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்ன நிலையில், இதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

வழக்கு
பலரும் ஆன்லைன் சூதாட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட இது தொடர்பான வழக்கு ஒன்றில் விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலி
இருவரும் ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் தோன்றி அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்ததற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டுமின்றி பிரகாஷ் ராஜ், தமன்னா, ராணா, சுதிப் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சரமாரியாக கேள்வி
இது தொடர்பான விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட செயலியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் பெயர்களும் மற்றும் சில செயலிகளில் மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் மாநிலங்களுக்காகவா விளையாடுகிறார்கள்? என அவர்கள் கேட்டனர்.

கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்
மேலும், சூதாட்ட செயலிகளின் முதலாளிகள் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள் என்றனர். நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிரபலங்கள் அனைவரும் நவம்பர் 19க்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
விராட் கோலிக்கு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் சென்னை வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். அப்போதும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


Click it and Unblock the Notifications