
ஏப்ரல் 9
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது

பயிற்சி முகாம்
ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. அதன்படி சி.எஸ்.கே அணி நேற்று முதல் சென்னையில் பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னால் பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

காரணம் என்ன?
கொரோனா காரணமாக இந்த முறை மொத்தமாக 6 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் விளையாடும். இதில் அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. எனவே சென்னை அணி தனது முகாமை மும்பைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி மும்பையில்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ்
இதே போல கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பயிற்சி முகாமை மும்பைக்கு கொண்டு செல்லவுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் இந்த முறை ஒரு போட்டி கூட நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் மும்பையில் பஞ்சாப் அணியின் பயிற்சி முகாம் தொடங்கப்படும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி சதீஸ் மேனன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications