
சி.எஸ்.கே ஏலம்
கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. குறிப்பாக கடந்த 2 சீசன்களிலும் அவர் 300 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கே சி.எஸ்.கே அவரை வாங்கியது.

விருப்ப அணி
இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் உத்தப்பாவிடம் அவர் எந்த அணியை எதிரிகொள்ள எதிர்பார்த்திருப்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவும், அந்த அணிக்கு எதிராக சிறப்பாக ஆடவும் காத்துள்ளேன். நடப்பு சாம்பியனை வீழ்த்தினால் அனைவருக்கும் சென்னை அணியின் பலம் குறித்து தெரிந்துவிடும் என கூறினார்.

ஆசை
உங்களது தனிப்பட்ட ஆசை என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உத்தப்பா, இந்த முறை சென்னை அணி மீண்டு வரவேண்டும் என்ற நோக்கில் உள்ளது. எனவே முடிந்தவரை நான் சி.எஸ்.கேவுக்கு நிறைய போட்டிகளில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே ஆசை எனத்தெரிவித்தார்.

அதிக ரன்கள்
மேலும் அவர், ஒரு ஐபிஎல் சீசனில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தாண்டு படைக்க வேண்டும் என உத்தப்பா ஆசை தெரிவித்துள்ளார். உத்தப்பா அதிகபட்சமாக 2014ம் ஆண்டு ஐபிஎல்-ல் 660 ரன்களை அடித்துள்ளார். இதுவரை ஒரு ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக விராட் கோலி 973 ரன்கள் குவித்துள்ளதே சாதனையாக உள்ளது.

ஐபிஎல்-ல் உத்தப்பா
ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்ன சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மொத்தம் 377 ரன்கள் அடித்து அத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதே போல் தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டி ஒன்றிலும் ஓப்பனராக களமிறங்கி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











