Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் குவாலிஃபையர் போட்டிக்கு ஆபத்து... தள்ளிப்போகும் ஐபிஎல் அட்டவணை.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெறுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்ட சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. லக்னோ அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 16 புள்ளிகளுடன் ஆர்சிபி 4வது இடத்தையும் உறுதி செய்துவிட்டன. இந்த அணிகளுக்கான ப்ளே ஆஃப் சுற்று வரும் மே 24ம் தேதி தொடங்கவுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் முதல் குவாலிஃபையர் போட்டி வரும் மே 24 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. இதற்கு காரணம் புயல் தான்.

கடும் மழை

கடும் மழை

சமீபத்தில் உருவான புயலால் கொல்கத்தாவில் கடும் மழை பொழிந்தது. இதனால் ஈடன் கார்டன் மைதானம் பெரியளவில் சேதாரம் அடைந்துள்ளது. போட்டி நாளன்றும் இதே போன்று கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் வெளிச்சமின்மையாக இருக்கும் என தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கங்குலியின் நடவடிக்கை

கங்குலியின் நடவடிக்கை

மழைக்காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று மாலை மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும் என்பது போன்று கூறி சென்றுள்ளார். ஆனால் போட்டி சரியாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது. அட்டவணை கூட மாற்றப்படலாம்.

Story first published: Sunday, May 22, 2022, 16:26 [IST]
Other articles published on May 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+