
தோனி முடிவு
இதற்காக தான் ஐபிஎல் தக்கவைக்கும் பட்டியலில் தமக்கு முன்னுரிமை வழங்காமல் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, தமக்கு 12 கோடி ரூபாய் போதும் என்று தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.தோனிக்கு பிறகு ரெய்னா என்ற காலம் போய் தற்போது அந்த இடத்திற்கு ஜடேஜா வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜடேஜா
தோனி அணியில் இருக்கும் போதே ஜடேஜாவை தயார் படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், நடப்பு சீசனிலேயே, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கொண்டு, ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும் தெரிகிறது. எனினும் இது சிஎஸ்கே வின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அந்த முடிவு கெடுப்பில் போடப்பட்டுள்ளது.

ருத்துராஜ்
இந்த நிலையில் ஜடேஜாவுக்கும் வயது 33 ஆகி விட்டது. இதனால் தொடக்கத்திலேயே ஒரு இளம் வீரரை அணியில் கேப்டனாக நியமித்துவிடலாம் என ஸ்ரீனிவாசன் நினைக்கிறார். அவர் மனதில் 2 வீரர்கள் தான் உள்ளனர். அதிலில் முதலாவதாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட். நல்ல பேட்ஸ்மேன், கிரிக்கெட் அறிவு இருப்பதால் ருத்துராஜை தோனி இருக்கும் போதே தயார்படுத்தலாம் என யோசிக்கிறார்.
Recommended Video

தீபக் சாஹர்
ஸ்ரீனிவாசன் மனதில் இருக்கும் இன்னொரு வீரர் தீபக் சாஹர். இனி நீ தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு தான் விளையாடுவாய் என்று ஸ்ரீனிவாசன் தம்மிடம் கூறியதாக தீபக் சாஹர் அன்மையில் பேட்டி ஒன்றில் கூறினார். தற்போது ஆல்ரவுண்டராக விளங்கும் தீபக் சாஹர், கேப்டனாகவும் ஜொலிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால் தான் அவருக்கு 14 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே நிர்வாகம் செலவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











