For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“உள்நாட்டிலேயே தோற்றுவிடுவோம்” தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ எடுத்த ரிஸ்க்.. சீனியர் எச்சரிக்கை!!

மும்பை: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Indian Team-க்கு 2 Coaches! Englandக்கு Dravid, SAவுக்கு Laxman | #Aanee'sAppeal |OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மே 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த தொடரை முடித்தவுடன் தென்னாப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதுகிறது.

 தென்னாப்பிரிக்க சீரிஸ்

தென்னாப்பிரிக்க சீரிஸ்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 17ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு தந்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர்.

 பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

அதாவது கடந்தாண்டை போலவே இந்திய மெயின் அணிக்கு பதிலாக ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கவுள்ளனர். இந்திய மெயின் அணியை ஜூலையில் வரவுள்ள இங்கிலாந்து தொடருக்காக தயார் படுத்தவுள்ளனர். பலமான தென்னாப்பிரிக்க அணியை எப்படி புதிய படை சமாளிக்கும் என்பதில் ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

சீனியர் அதிருப்தி

சீனியர் அதிருப்தி

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தென்னாப்பிரிக்க தொடருக்கு புதிய அணியை முயற்சிக்க நினைப்பது சரியான முடிவு அல்ல. எதிரணியை சாதாரணமாக எடை போடுவதை மீண்டும் ஒருமுறை சிந்தனை செய்யுங்கள்.

இளம் வீரர்களுடன் கூடிய சாதாரண அணி இந்த தொடருக்கு சென்றால் நிச்சயம் தோற்றிவிடும்.

தென்னாப்பிரிக்க படை

தென்னாப்பிரிக்க படை

எனவே தேர்வுக்குழுவிடம் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால் நாமும் மெயின் வீரர்களை கொண்டு தான் ஆட வேண்டும். ஏனென்றால் பவுமா அட்டகாசமான கேப்டன். டிக்காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் போன்றோர் அட்டகாசமான ஃபார்மில் உள்ளனர். ஓப்பனிங் முதல் பவுலிங் வரை சிறப்பாக உள்ளதால், உள்நாட்டிலேயே நாம் தோற்க நேரிடம்.

Story first published: Wednesday, May 18, 2022, 18:01 [IST]
Other articles published on May 18, 2022
English summary
Aakash chopra on Team India squad ( இந்திய அணிக்கு ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை ) தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ-க்கு ஆகாஷ் சோப்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+