For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதுமட்டும் சரியில்லை... கொல்கத்தா அணி மீது குறைக்கூறிய ஆண்ட்ரே ரஸல்.. அதிரடிக்கு பின் ஆதங்கம்!!

மும்பை: என்னதான் சிறப்பாக விளையாடினாலும், கொல்கத்தா அணியில் எனக்கு ஒரு குறை இருக்கிறது என ஆண்ரே ரஸல் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 8வது லீக் போட்டியாக நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, தோல்வி பயத்தை காட்டிய போதும், இறுதியில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தடுமாற்றம்

கொல்கத்தா தடுமாற்றம்

138 என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அஜிங்கியா ரகானே 12 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுக்கும், நிதிஷ் ராணா டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி தந்தனர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பீஸ்ட்டாக மாறிய ரஸல்

பீஸ்ட்டாக மாறிய ரஸல்

அப்போது களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரஸல், வானவேடிக்கை காட்டினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பிட்ச்-ல் ரஸல் மட்டும் பஞ்சாப் அணியின் ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்து 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் அந்த அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. 31 பந்துகளை சந்தித்த ரஸல் 2 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.

 ரஸலின் நெகிழ்ச்சி பேச்சு

ரஸலின் நெகிழ்ச்சி பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரஸல், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 4 விக்கெட்டுகள் சென்றுவிட்டன, எனக்கு பிறகு பவுலர்கள் தான் உள்ளனர். எனவே பொறுப்பை உணர்ந்து விளையாடினேன். ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவவில்லை. இதனால் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி வந்தேன். என்னுடைய முழு திறனையும் கொண்டு வந்துதான் ஆடியுள்ளேன்.

 ஆண்ட்ரே ரஸல் ஆதங்கம்

ஆண்ட்ரே ரஸல் ஆதங்கம்

இருப்பினும் எனக்கு ஒரு குறை உள்ளது. டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். பவர்ப்ளேவில் வாய்ப்பு தந்தால் அதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் தான். 4 ஓவர்களையும் வீச வேண்டும் என கேட்கவில்லை. குறைந்தது 2 ஓவர்களாவது எனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Recommended Video

IPL 2022 : MS Dhoni controlling game over captain Ravindra Jadeja -Ajay Jadeja | Oneindia Tamil
என்ன காரணம்

என்ன காரணம்

ஏனென்றால் ஒரு ஆல்ரவுண்டரான நான் பேட்டிங்கில் மட்டும் சிறப்பாக இருந்தால் மன ஆறுதல் இருக்காது. பவுலிங்கிலும் எனது பங்கை சரியாக கொடுத்தால் தான் நானும், உதவினேன் என்ற எண்ணம் இருக்கும். இவை நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

Story first published: Saturday, April 2, 2022, 16:21 [IST]
Other articles published on Apr 2, 2022
English summary
IPL 2022: Andrew russell feels bad for not getting bowling chances, after hits massive run against PBKS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+