Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் குறித்து இழிவான பேச்சு.. இங்கி, வீரர்களால் கொதித்தெழுந்த அஸ்வின்..உணர்ச்சிமயமான பதிலடி!

சென்னை: ஐபிஎல் தொடர் குறித்து தவறாக பேசிய சில முன்னாள் வீரர்களுக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி வான்கடேவில் நடைபெறும் எனத்தெரிகிறது.

இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் ஆட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

மொத்தமுள்ள 10 அணிகளையும் 2 குரூப்களாக பிரித்து லீக் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ள அணிகள் தான் ப்ளே ஆஃப்-க்கு செல்லும். அதன்படி 70 லீக் போட்டிகள் மற்றும் 4 ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம்.

ஐபிஎல் நடைபெறக்கூடாது?

ஐபிஎல் நடைபெறக்கூடாது?

இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கக்கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஷஸ் தொடரில் 4 - 0 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஐபிஎல்-ல் வீரர்கள் விளையாடுவதால் தான் சர்வதேச போட்டிகளில் சொதப்புகின்றனர் எனக்கூறுகின்றனர். பத்திரிகையாளர் ஒருவர் ஐபிஎல் தொடர் ஒரு ஆண்டில் 3ல் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது எனக்குற்றம்சாட்டியுள்ளார்.

அஸ்வின் தந்த பதிலடி

அஸ்வின் தந்த பதிலடி

இந்நிலையில் அஸ்வின் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஐபிஎல் போட்டிகள் 2 வாரங்கள் அதிகமாவதால் அப்படி என பிரச்சினை உங்களுக்கு?. இங்கிலாந்து, தென்னாப்பிர்க்கா, இலங்கை, நியூசிலாந்து என பல அணிகளும் ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றன. அவர்களின் ஆட்டத்தை ஐபிஎல் கெடுக்கவில்லையே.

ஐபிஎல்-ன் நீளத்திற்கு பதில்

ஐபிஎல்-ன் நீளத்திற்கு பதில்

ஐபிஎல் 2 மாதங்கள் நடக்கிறது எனக்கூறுகிறார்கள்.. இங்கிலாந்தின் இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் தொடர் 6 மாதங்கள் நடக்கிறது. வாரத்தில் ஒன்று அல்லது 2 போட்டிகள் தான் நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன பதில் இருக்கிறது. ஐபிஎல் தொடர், கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது என்பது தான் உண்மை. இது அனைத்து ரசிகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தெரியும்.

Recommended Video

IND vs SL Rohit Sharma Will Change The Total Batting Order Of Team India : Reports | Oneindia Tamil
20 வீரர்கள் முதல் 80 வீரர்கள்

20 வீரர்கள் முதல் 80 வீரர்கள்

2008, 2010 காலக்கட்டங்களில் இந்திய அணியில் முதன்மை வீரர்களாக விளையாட நாங்கள் 20 - 25 வீரரகள் தான் இருந்தோம். 10 வருடம் ஆடினாலும் 20 - 25 வீரர்கள் தான் இருப்பார்கள் என்பதால் அவர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் பலனடைந்தார்கள். ஆனால் இன்று குறைந்தது 75 - 80 வீரர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெறுகின்றனர். இது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. எனவே ஐபிஎல் குறித்து குறைக்கூறாதீர்கள் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 2, 2022, 10:09 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+