
கடந்த சீசனின் சர்ச்சைகள்
அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகள் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. சார்ஜா, அபுதாபி, துபாய் என மூன்றே மைதானங்களில் ஒட்டுமொத்த ஆட்டமும் முடிந்தது. அங்குள்ள பிட்ச் குறித்தும், பனிப்பொழிவு குறித்தும் அனைவருக்கும் தெரிந்ததால், டாஸை வைத்தே யார் வெல்வார்கள் என சுலபமாக கணிக்கப்பட்டது. கேப்டன்களும், முன்கூட்டியே சரியாக கணித்துவைத்திருந்ததால், சுவாரஸ்யங்கள் இல்லாமல் இருந்தது.

பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு
இதே போல தான் இந்த சீசனிலும், 5 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. 70 லீக் போட்டிகள் வெறும் 4 மைதானங்களில் நடக்கின்றன. ஆனால் இங்கு தான் பிசிசிஐ மாஸ்டர் ப்ளானை செய்துள்ளது. இந்த முறை எந்தவொரு கேப்டனாலும், பிட்ச்- ஐ கணிக்க முடியாது. மேலும் ரசிகர்களுக்கும் போட்டியின் முடிவு என்னவென சஸ்பென்ஸாகவே இருக்கும்.

என்ன காரணம்
அதாவது ஒவ்வொரு மைதானத்திலும், தலா 5 பிட்ச்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளின் போது, சுழற்சி முறையில் இந்த பிட்ச்-கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பிட்ச்-ம் ஒவ்வொரு குணத்தை கொண்டது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மைதானங்களின் பொறுப்பாளர் நதீம் மெமோன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

முதல் போட்டி எங்கு
வரும் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 10 அணிகள், 2 குரூப்கள், புதிய விதிமுறைகள் என பிசிசிஐ சர்ஃபரைஸ் கொடுத்துள்ள சூழலில் இந்த பிட்ச்- அறிவிப்பு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications