சுழற்பந்துவீச்சாளர்
சென்னை அணி தனது பிளேயிங் லெவனில் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் மொயின் அலி இல்லை என்பதால், 2வது சுழற்பந்துவீச்சாளராக தீக்சானா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மிட்செல் சாண்டனர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹங்கர்கேகர்
இதே போன்று அண்டர் 19 அதிரடி வீரர் ஹிங்கர்கேகர் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இல்லை. இதனால் அவருக்கு பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் இந்த டிவிஸ்ட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
ஹங்கர்கேகர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க கூடியவர். ஆனால் அவருக்கு ஏன் இடமில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சிஎஸ்கேவின் இந்த முடிவுக்கு பின்னால் 2 காரணம் உள்ளது. ஒன்று சிவம் துபே இடதுகை பேட்ஸ்மேன். கீழ் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சுலபமாக சிக்சர் அடிக்க முடியும்.
Recommended Video
வான்கடே மைதானம்
மேலும் வான்கடே மைதானத்தில் ஒரு முனையில் உள்ள எல்லை கோடு சிறியதாக இருக்கும். இதனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிக்சர் அடிக்க ஏதுவாக இருக்கும். அதை தவிர 2வது காரணம், ஹங்கர்கேகரின் திறமையை தொடக்கத்திலேயே மற்ற வீரர்களுக்கு காட்டாமல், தொடரின் முக்கிய கட்டத்தில் ஹங்கர்கேரை களமிறக்கி எதிரணிக்கு சர்பரைஸ் தரலாம் என்று சிஎஸ்கே நினைக்கலாம்.