For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“2 சொத்துக்கள் கிடைத்துள்ளது”.. ஐபிஎல் 2023 குறித்து தோனி மாஸ் பேச்சு.. ரசிகர்கள் பெரும் நம்பிக்கை!

மும்பை: சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து எம்.எஸ்.தோனி நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியிடம் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்தது. இதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி? அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?

சிஎஸ்கேவின் சொதப்பல்

சிஎஸ்கேவின் சொதப்பல்

சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 2 ரன்களுக்கும், டெவோன் கான்வே 16 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். எனினும் பொறுப்புடன் ஆடிய மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்களும், கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்களையும் சேர்த்தனர். இதனல் 150 ரன்கள் குவிக்க முடிந்தது.

ராஜஸ்தான் அணி வெற்றி

ராஜஸ்தான் அணி வெற்றி

151 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் ஜாஸ் பட்லர் 2 ரன்கள், சஞ்சு சாம்சன் 15, தேவ்தத் பட்டிக்கல் 15 என விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பொறுப்புடன் ஆடி 59 ரன்களை சேர்த்தார். 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அஸ்வின் 23 பந்துகளில் 40 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் சுலபமாக வெற்றி கண்டது.

தோனியின் விளக்கம்

தோனியின் விளக்கம்

சென்னை அணியின் தோல்வி குறித்து பேசிய தோனி, நாங்கள் பேட்டிங்கில் சற்று பின் தங்கியுள்ளோம் என்பதை உணர வேண்டும். முன்கூட்டியே விக்கெட்டுகள் சரிந்த போது, மொயீன் அலி பொறுப்புடன் ஆடி காப்பாற்றினார். ஆனால் அந்த சமயத்தில் மற்றொரு விக்கெட் சென்றிருந்தால், இந்த இலக்கை கூட எங்களால் நிர்ணயித்திருக்க முடியாது. இதனையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Recommended Video

CSK தோல்விக்கு உண்மையான காரணம் இதுதான்.. Ruturaj Gaikwad உருக்கம் #Cricket | Oneindia Tamil
2 சொத்துக்கள் உள்ளனர்

2 சொத்துக்கள் உள்ளனர்

15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்துவிட்டோம். ஆட்டத்தில் தொடக்கம் சரியில்லை என்றால் 180 ரன்கள் அடித்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியாது. நடப்பு சீசனில் முகேஷ் சௌத்ரி ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்து பல விஷயங்களை நன்கு கற்றுக்கொண்டிருக்கிறார். இதே போல பதிரானாவும் மிகவும் சவால் கொடுக்கிறார். இவர்கள் அடுத்தாண்டு நிச்சயம் சிறப்பாக வருவார்கள். ஐபிஎல் ஒன்றும் ஓராண்டுடன் முடிவடைவது இல்லை. அடுத்தாண்டு கம்பேக் கொடுக்கலாம் எனக் கூறினார்.

Story first published: Saturday, May 21, 2022, 10:16 [IST]
Other articles published on May 21, 2022
English summary
Dhoni speech on CSk vs RR match ( சிஎஸ்கே vs ராஜஸ்தான் போட்டியில் தோனி பேச்சு ) ராஜஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார். அடுத்தாண்டு குறித்து நம்பிக்கை பேச்சு.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X