
வெளிநாட்டு வீரர்கள்
இதனால் எந்த ஆல் ரைவுண்டரை விடுவது யாரை சேர்ப்பது என்ற குழப்பத்தில் தோனியும், ஃபிளமிங்கும் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களாக டேவான் கான்வே, மொயின் அலி, பிராவோ, ஆடம் மிலின் அல்லது பிரிட்டோரியஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

சிவம் துபே
தற்போது இந்திய வேகப்பந்து ஆல்ரவுண்டராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தோனி உள்ளார். இந்திய வீரர் சிவம் துபே பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் இந்திய அணியில் விளையாடியுள்ள அனுபவமும் சிவம் துபேவுக்கு உள்ளது. இதனால் சிவம் துபேவை நடுவரிசையில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹங்கர்கேகர்
எனினும் தோனியின் முடிவு இந்திய அண்டர் 19 வீரர் ராஜவர்த்தனே ஹங்கர்கேகராக இருக்கலாம் என தெரிகிறது. ஹர்திக் பாண்டியாவை போல் பேட்டிங் செய்யும் அவர், பந்துவீச்சிலும் நல்ல வேகத்துடன் வீசக்கூடியவர். இதனால் ஹங்கர்கேகரை கீழ்வரிசையில் அதாவது 7வது 8வது வீரராக களமிறக்கலாம்.
Recommended Video

குழப்பம்
ஆனால் பிளேயிங் லெவனில் இருவருக்குமே இடம் கிடைப்பது சந்தேகம். ஏனெனில் வெளிநாட்டு வீரர்களையும், ருத்துராஜ், தோனி, ஜடேஜா, அம்பத்தி ராயுடுவையும் சேர்த்தாலே 8 பேர் இடம்பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள 3 இடத்தில் 1 வேகப்பந்துவீச்சாளரை சேர்த்து, இந்த 2 ஆல் ரவுண்டரையும் சேர்த்துவிடலாமா, இல்லை ஒருவருக்கு மட்டும் தான் இடம் விழங்கலாமா என்ற குழப்பத்தில் தோனி உள்ளார்.


Click it and Unblock the Notifications











