
புதிய விதிமுறைகள்
இந்தாண்டு 10 அணிகள் மோதிக்கொள்வதால் ஏ, பி என 2 குரூப்களாக பிரித்துக்கொள்வார்கள். அதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன் பின்னர் மற்றொரு குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும். மற்ற 4 அணிகளுடனும் தலா ஒரே ஒரு முறை மட்டும் மோதிக்கொள்ளும்.

குரூப்கள்
அதன்படி ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. "பி" குரூப்பில் சிஎஸ்கே, ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டான்ஸ் அணிகள் மோதுகின்றன.

சுவாரஸ்ய விஷயம்
இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வேறு வேறு குரூப்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு குரூப்களிலும் சம பலமான அணிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவை ஒரே ஒரு முறை தான் மோதிக்கொள்ளுமா என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருக்கலாம்.
Recommended Video

பிசிசிஐ ப்ளான்
ஆனால் சிஎஸ்கே மற்றொரு குரூப்பில் 2 முறை மோதவுள்ள அந்த அணியாக மும்பை தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 குரூப்களில் பெரும் பலம் கொண்ட அணிகளும் இருக்கும். அதேவேளையில் அந்த இரண்டு அணிகளும் மோதிக்கொளும் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











