
பிசிசிஐ-ன் அறிவிப்பு
கொரோனா காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை, புனே நகரங்களில் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து அணிகளும் வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மும்பையில் ஆஜராக வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அங்குள்ள தனியார் ஹோட்டலில் அனைவரும் பயோ பபுளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

கடுமையான குவாரண்டைன்
அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்கள் குவாரண்டைனும், இந்திய வீரர்களுக்கு 3 நாட்கள் குவாரண்டைனும் கட்டாயம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாரண்டைன் காலத்தில் எடுக்கப்படும் 3 கொரோனா பரிசோதனையிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் வரும் மார்ச் 14ம் தேதி முதல் அணிகள் பயிற்சியை தொடங்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பு சிஎஸ்கேவுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. சென்னை அணி தான் வழக்கமாக முதலில் பயிற்சி முகாமை தொடங்கும். அந்தவகையில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் சூரத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. சூரத்தில் தான் தோனியின் மாஸ்டர் ப்ளானே இருந்தது.

சூரத்தின் ஸ்பெஷல்
அதாவது மும்பையில் உள்ள பிட்ச்-ம், சூரத்தில் உள்ள பிட்ச்-ம் கிட்டத்தட்ட 75% ஒரே மாதிரியானவை ஆகும். எனவே அங்கு விளையாடி பயிற்சி பெற்றால் மும்பையில் ஆட சுலபமாக இருக்கும் என கணக்குப்போட்டார். அதன்படி 20 வீரர்கள் வரை சூரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பிசிசிஐ-ன் நடவடிக்கையால் அனைவரும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் மும்பைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிஎஸ்கேவில் அனுபவ வீரர்கள் குறைவாக இருப்பதால் மும்பை களத்தை சமாளிப்பது சிரமம் தான்.


Click it and Unblock the Notifications