For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹங்கர்கேகருக்கு ஏன் வாய்ப்பு தரல? சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் சொன்ன பதில்.. இருந்தாலும் அது சரியா?

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஹங்கர்கேகருக்கு ஏன் சிஎஸ்கே அணியில் ஏன் வாய்ப்பு தரவில்லை என்பது குறித்து பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Stephen Fleming is hopeful of Moeen Ali to recover in a week | Oneindia Tamil

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹங்கர்கேகரை ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. குட்டி ஹர்திக் பாண்டியா என்று பெயர் பெற்ற ஹங்கர்கேகருக்கு,

ஏன் இதுவரை வாய்ப்பு தரவில்லை என்று சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பினர். ஏனெனில் ஹங்கர்கேகர் அதிவேகமாக பந்துவீச கூடியவர்.

ஏன் வாய்ப்பு இல்லை

ஏன் வாய்ப்பு இல்லை

பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக் கூடியவர். இந்திய அணி 2022 அண்டர் 19 உலககோப்பையை வென்றதற்கு ஹங்கர்கேகர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஹங்கர்கேகருக்கு பிளேயிங் லெவனில் முதல் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 போட்டிகள் முடிந்தும், ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

கடுமையாக இருக்கும்

கடுமையாக இருக்கும்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிளமிங், ஹங்கர்கேகர் திறமையான வீரர் என்பதை நான் அறிவேன். அண்டர் 19 கிரிக்கெட்டில் பல பெரிய ஆட்டங்களை அவர் ஆடியிருக்கிறார். ஆனால், இது அண்டர் 19 கிரிக்கெட்டை விட கடுமையாக இருக்கும். இதனால் , அவரை முதல் போட்டியிலேயே விளையாட விட்டு, அவருடைய நம்பிக்கையை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. அவரை கவனத்துடன் கையாள வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

ஹங்கர்கேகருக்கு சில பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அவர் வேகமாக பந்துவீசுகிறார். ஆனால் அந்த வேகத்தை போட்டியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கற்று கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால் அவருக்கு இந்த சீசனிலேயே வாய்ப்பு வழங்குவோம் என்று கூறினார். ஃபிளமிங்கின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அவர் சொல்வது 100 சதவீதம் சரியே.

பஞ்சாப் தவறு

பஞ்சாப் தவறு

சென்னை மட்டுமல்ல, அண்டர் 19 வீரர்களை ஏலம் எடுத்த எந்த அணியும் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை. ராஜ் பவாக்கு மட்டும் பஞ்சாப் ஒரு சில போட்டியில் வாய்ப்பு வழங்கியது. பிறகு, அவரை அணியிலிருந்து நீக்கியது. இது இளம் வீரரான அவரின் நம்பிக்கையை உடைக்கும். அண்டர் 19 கிரிக்கெட்டை விட, இது கடுமையாக இருக்கும் என்பதால், இளம் வீரர்கள் மனதளவில் தயாராக வேண்டும்.

உமுகுந்த் சந்த் கதை

உமுகுந்த் சந்த் கதை

இதே போன்று தான் அண்டர் 19 வீரர் உமுகுந்த் சந்த்க்கு டெல்லி அணி முதல் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கியது. ஆனால் பிரட்லீ வீசிய முதல் பந்திலேயே கிளின் போல்ட் ஆனார். அவருடைய நம்பிக்கை அங்கேயே அழிந்துவிட்டது. அதன் பிறகு அவருடைய கிரிக்கெட் இறங்குமுகமாக தான் இருந்தது. இந்த அச்சம் காரணமாகவே ஹங்கர்கேகரை பிளேயிங் லெவனில் சிஎஸ்கே சேர்க்கவில்லை.

Story first published: Wednesday, April 27, 2022, 18:59 [IST]
Other articles published on Apr 27, 2022
English summary
IPL 2022 – CSK coach Stephen fleming reveals why Hangerkar is not Playing ஹங்கர்கேகருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை? சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் சொன்ன பதில்.. இருந்தாலும் அது சரியா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+