
ஜடேஜா 150
சிஎஸ்கே அணியில் சாதாரண வீரராக உள்ளே நுழைந்து தற்போது தோனிக்கு அடுத்த இடத்தில் கேப்டனாக முன்னேறியுள்ளார் ஜடேஜா. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா இன்று 150வது போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த பெருமைக்குரிய போட்டியில் அணிக்காக ஜடேஜா பேட் மற்றும் பந்துவீச்சில் வெற்றியை தேடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயுடு மைல்கல்
இதே போன்று சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் அம்பத்தி ராயுடு, இன்றைய ஆட்டத்தில் 29 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது அவர் 3971 ரன்கள் அடித்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிராக ராயுடு 16 இன்னிங்சில் 513 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132 ஆக உள்ளது.

ருத்துராஜ் வரலாறு
இந்த நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ருத்துராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் தான். இந்த சீசனில் 0, 1,1, என மட்டுமே ஸ்கோர் அடித்துள்ளார். இதே மாதிரி தான் கடந்த சீசன்களிலும் முதல் 3 போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில் பார்த்தால், கடந்த 2 சீசன்களிலும் ருத்துராஜ் தனது 4வது போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.

சமாளிக்குமா சிஎஸ்கே
இதனால் இன்றைய ஆட்டத்திலும் ருத்துராஜ் அரைசதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், எம்ரான் மாலிக், நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துவீச்சை சிஎஸ்கே வீரர்கள் சமாளித்து 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் பந்துவீச்சு குறையாக இருக்கும் போது, பேட்டிங் தான் சிஎஸ்கேவை காப்பாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications











