
விமர்சனம்
இந்த நிலையில், சிஎஸ்கே ஏலத்துக்கு முன்பே தக்கவைத்து கொண்ட ருத்துராஜ் 0,1,1 என 3 போட்டியில் 2 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ருத்துராஜை விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே ஆதரவு
ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்குவோம் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார். ருத்துராஜ் தங்கள் அணியின் முக்கியமான வீரரும், அவர் பழைய ஃபார்ம்க்கு திரும்ப வருவார் என்றும் அவர் கூறினார். இதே கருத்தை வலியுறுத்திய சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், ருத்துராஜ்க்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றார்.

உருக்கமான கோரிக்கை
இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கடந்த முறை நாங்கள் தான் சாம்பியன் அணி

உறுதி அளிக்கிறேன்
இம்முறை நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம். உங்கள் அனைவருக்கும் நான் உறுதி அளிக்கிறேன். இனி வரும் போட்டிகளை வெல்ல நாங்கள் 100 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை கொடுப்போம் என்று கூறியுள்ளார். கடந்த 2 சீசனிலும் முதல் 3 போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், 4வது போட்டியில் அரைசதம் விளாசினார். இதனால் ருத்துராஜ் இம்முறையும் அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











