
சாம் கரண்
சிஎஸ்கே அணியில் தற்போது ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் தேவை. பிராவோ பந்துவீச்சில் ஜொலித்தாலும், அவருடைய பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்றாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை சிஎஸ்கே குறிவைத்து எடுக்க அதிக வாய்ப்புள்ளது. சாம் கரண் ஏலத்தில் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதால், சிஎஸ்கேவும் அதற்கான பர்ஸ் பெலன்சை தயார்படுத்துவோம்.

பென் ஸ்டோக்ஸ்
இந்த ஆசை கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் , அடுத்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவேன் என உறுதி அளித்தால், அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளுமே போட்டி போடும். சாம் கரண் இருக்கும் அணியில் ஸ்டோக்ஸ் தேவையில்லை என்றாலும், அவர் கிடைக்கலானா இவர் என்ற பாணியில் சிஎஸ்கே களமிறங்கலாம். மேலும் ரெய்னாவுக்கு பிறகு நம்பர் 3 வீரர் பேட்டிங்கில் இல்லை. ஒரு வேலை ஸ்டோக்சை வைத்து அந்த இடத்தை சிஎஸ்கே நிரப்பலாம்.

தினேஷ் பானா
சிஎஸ்கே அணி நிச்சயமாக அண்டர் 19 போட்டியில் ஜொலித்த தினேஷ் பானாவை குறிவைத்து ஏலத்தில் எடுக்கும். தோனிக்கு பிறகு இந்திய விக்கெட் கீப்பர் யாரும் அணியில் இல்லை. இதனால் தினேஷ் பானாவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்யும். ஏனென்றால் சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தினேஷ் பானாவுக்கு இந்த சீசனில் சிறப்பு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மதிஷா பிரத்திரானா
இலங்கை அணியின் அடுத்த மலிங்கா என்று போற்றப்படும் மதிஷா பிரத்திரானா தற்போது ஆடம் மிலினுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் தான சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மினி ஏலத்தில் மதிஷா பிரத்திரானா இருப்பாரா இல்லையா என்று தெளிவில்லை. அப்படி இருந்தால் சிஎஸ்கே மதிஷா பிரத்திரானாவை ஏலத்தில் குறிவைக்கும். இல்லையேனில் மிலினுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மதிஷா அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவில் தொடர்வார்.


Click it and Unblock the Notifications











