டக்அவுட்
ஆட்டத்தின் முதல் பந்தே உமேஷ் யாதவ் நோ பால் வீசினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், டக் அவுட் ஆனார். கடந்த 2020ஆம் ஆண்டு சீசனிலும் கெய்க்வாட் இதே போன்று டக் அவுட்டாகி, இறுதியில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வாங்கினார்.
கான்வே அவுட்
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய நியூசிலாந்து வீரர் கான்வே, பெரிய ஷாட் ஆட முற்பட்டு 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அனைத்து பொறுப்புகளும் ராயுடு தலை மீது விழுந்தது. ராயுடு அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முற்பட்டார்.
ராயுடுக்கு லக்
இந்த நிலையில், ஆட்டத்தின் 5 புள்ளி 5வது ஓவரில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது. கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை ராயுடு அடிக்க முற்பட்ட போது, அது ஸ்டம்பை பதம் பார்த்தது. ஆனால் ஸ்டம்பில் இருந்த பைல்ஸ் நகரவும் இல்லை, கீழே விழுவும் இல்லை. ஆனால் பந்தோ பவுண்டரிக்கு சென்றது.
சிஎஸ்கே தடுமாற்றம்
இதனால் ராயுடுவுக்கு மேலும் ரன் குவிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராயுடு 15 ரன்கள் எடுத்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாகி, தனது விக்கெட்டை கொல்கத்தா வீரர்களுக்கு பரிசை அளித்தார். அதிரடியாக விளையாடிய உத்தப்பாவும் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க சென்னை அணி தற்போது தடுமாறி வருகிறது.