
இன்றைய போட்டி
ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய இனி உள்ள 7 போட்டிகளில் 5 வெற்றிகளையாவது பெற வேண்டும். வீரர்கள் அனைவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நல்ல கம்பேக் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வெற்றி பெற்றால் ஒரே அடியாக புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்படும்.

என்ன மாற்றம்
புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் நீடித்து வருகின்றன. 5வது இடத்தில் ஆர்சிபி அணி 10 புள்ளியுடன் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 6 புள்ளிகளுடன் 6,7,8 ஆகிய இடங்களில் உள்ளன. சென்னை அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியல்
இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டால், ரன் ரேட் அடிப்படையில் 6 புள்ளிகளுடன் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளை பின்னுக்குத் தள்ளி, 6ஆவது இடத்தை பிடித்துவிட முடியும். ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகும்.
Recommended Video

ப்ளே ஆஃப்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளது. ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற குறைந்தது 14 புள்ளிகளை பெற வேண்டும். 10 அணிகள் என்பதால் 2 புள்ளிகள் சேர்த்தே தேவைப்படலாம். அந்த வகையில் சென்னை அணி அடுத்த 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications