ரெய்னாவுக்காக சிஎஸ்கே செய்த காரியம்.. பழச மறக்காத சிஎஸ்கே.. சின்ன தல ரசிகர்கள் நெகிழ்ச்சி
மும்பை: ரெய்னாவுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னாவை இம்முறை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணியும் ஏலத்தில் தேர்வு செய்யவில்லை.
இதனால் ரெய்னா கிரிக்கெட் வர்ணனைக்கு சென்றுவிட்டார். ரெய்னா முதுகில் சிஎஸ்கே குத்திவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

விரிசல்
ஆனால் ரெய்னா தான் தோனியின் பேச்சை கேட்கவில்லை என்றும், அணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதனால் ரெய்னா, தோனி நட்பில் விரிசல் ஏற்பட்டது. ரெய்னாவின் தந்தை இறந்த போது கூட தோனி, ரெய்னாவை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

பழைய பாசம்
இந்த நிலையில், ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியை விட்டு கொடுக்காமல் ஆதரவு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட சிஎஸ்கே அணியை பெரிதும் இம்முறை எதிர்பார்ப்பதாகவும், சிஎஸ்கே வீரர்கள் மொயின் அலி, ருத்துராஜ் குறித்தும் ரெய்னா பாராட்டி பேசினார். இதனால் ரெய்னா சிஎஸ்கே மீது பாசம் மாறாமல் தான் இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து
இதனிடையே, ரெய்னாவின் மகன் ரியோ இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக சிஎஸ்கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் லியோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரெய்னா ரசிகர்கள், சிஎஸ்கே பழைய விசயங்களை மறக்கவில்லை என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

பயிற்சியாளர்
இதனிடையே, ரெய்னாவின் மகன் ரியோ இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக சிஎஸ்கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் ரியோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரெய்னா ரசிகர்கள், சிஎஸ்கே பழைய விஷயங்களை மறக்கவில்லை என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications