
சிஎஸ்கே பரிதாபம்
இந்த தொடரில் சென்னை அணி விளையாடிய முதல் 3 போட்டிகளில் தோல்விகளையே சந்தித்தது. 3 அடிக்கு பின்னர் மீண்டு வரும் என ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் 4வது முறையும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணியின் இந்த தோல்விகளுக்கு முக்கிய பவுலர் தீபக் சஹார் இல்லாதது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது நிலை என்ன
காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு பிரச்சினை காரணமாக தீபக் சஹாரால் விளையாட முடியவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் வலைப்பயிற்சியை தொடங்கிய அவர், ஏப்ரல் 26ம் தேதிக்குள் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை அணி ரசிகர்களும் நம்பிக்கையுடம் இருந்தனர்.

புதிய பூகம்பம்
இந்நிலையில் புது பூகம்பம் கிளம்பியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபக் சஹாருக்கு முதுகுப்பகுதியில் பிரச்ச்சினை ஏற்பட்டுள்ளது. சஹாருக்கு ஏற்கனவே இந்த பிரச்சினை இருந்து சரியான நிலையில், மீண்டும் அது பெரிதாக உருவெடுத்துள்ளது. 2 காயங்கள் ஏற்பட்டுவிட்டதால் அவர் இனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகக்கடினம் என கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் நம்பிக்கையிழந்துவிட்டனர்.

நேரமே இல்லையே
சென்னை அணி இன்று இரவு ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மோதுகிறது. தீபக் சஹாரின் இடத்தை தற்போதைக்கு முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தான் நிரப்பி வருகின்றனர். எனவே இருக்கும் வீரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











