
ரிஷப் டெண்ஷன்
குறிப்பாக ஜாஸ் பட்லர் 57 பந்தில் சதம் விளாசினார். படிக்கல் அரைசதமும், இறுதியில் சாம்சன் அதிரடியும் காட்ட ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழடபபிற்கு 222 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ரிணப் பண்ட் எடுத்த எந்த முயற்சியும் கைக்கூட வில்லை. இதனால் அவர் தொடக்கம் முதலே டென்ஷனாகவே காணப்பட்டார்.

காரணம் என்ன?
அதற்கு காரணம், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்திற்கு வரவில்லை. யார் உதவியும் இன்றி பல தடைகளை கடந்து டெல்லி இன்று விளையாடியது. இதனால், களத்தில் நினைத்தது ஏதும் டெல்லிக்கு நடைபெறவில்லை.

குல்தீப்பை திட்டிய ஷர்துல்
குறிப்பாக ஷர்துல் தாக்கூருக்கும், கேப்டன் ரிஷப் பண்ட்க்கும் என்ன சிக்கல் நடந்தது என தெரியவில்லை. அவருக்கு 4 ஓவரை வழங்காமல் வெறும் 3 ஓவர் தான் ரிஷப் பண்ட் வழங்கினார். இந்த நிலையில், 20 ஓவரில்5வது பந்தில், ஷர்துல் வீசிய பந்தை, சாம்சன் அடிக்க, அதனை 30 மீட்டர் வளையத்தில் இருந்த குல்தீப் தடுக்காமல் கோட்டைவிட்டார். இதனால் களத்திலே ஷர்துல் திட்டினார்.

ரிஷப் பண்ட் ரியாக்சன்
இதனையடுத்து ஷர்துல் வீசிய கடைசி பந்து சிக்சருக்கு பறந்தது. இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் ஷர்துல் தாக்கூரை பார்த்து முறைத்தார். இதனையடுத்து, ரிஷப் கோபமாக பெவிலியனுக்கு சென்றார். இருவரும் களத்தில் பேசி கொள்ளவே இல்லை. ஷர்துல், குல்தீப்பை திட்டியதும், பிறகு ஷர்துலை பார்த்து ரிஷப் முறைத்ததும் அந்த அணியில் ஏதோ சரியில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.


Click it and Unblock the Notifications