
கோட்டைவிட்ட மும்பை
ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரவீஸ், திலக் வர்மா, டிம் டேவிட் என மும்பை அணி எடுத்தாலும் காயத்தில் இருந்த ஆர்சருக்கு அதிக பணம் கொடுத்து தவறு செய்தது. மேலும் இஷான் கிஷனை எடுக்க வேண்டுடம என்பதற்காக பல முக்கிய வீரர்கடிள மும்பை அணி ஏலத்தில் எடுக்காமல் கோட்டைவிட்டது.

பந்துவீச்சு மோசம்
சிங்கப்பூர் அதிரடி வீரர் டிம் டேவிட்க்கு 8 கோடிக்கு மேல் கொடுத்தும், அவருக்கு போதிய வாய்ப்பு தராமல் பேஞ்சில் அமர வைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாததும், பும்ராவுக்கு சப்போர்ட் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளரும் இல்லாமல் அந்த அணி பவுலிங் படு வீக்காக உள்ளது.

தோல்விக்கு காரணம்
குறைந்தபட்சம் டிம் டேவிட்டுக்கு பதிலாக பவுல்ட்டையாவது மும்பை அணி ஏலத்தில் எடுத்து இருக்கலாம். சரி இருக்கும் வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்வதிலும் மும்பைக்கு குளறுபடி தான். மற்ற அணிகளில் 11 பேரும் பேட்ஸ்மேன்களாக உள்ள நிலையில். மும்பை அணியில் வெறும் 6 பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளனர்.
Recommended Video

வெளியேறிய ரசிகர்கள்
இப்படி தொடர்ந்து மும்பை அணி சொதப்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பார்க்காமல் மும்பை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். இத்ன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் மும்பை அணி தொடர்ந்து 5 முறை தோல்வியை தழுவியது இது 2வது முறையாகும்.


Click it and Unblock the Notifications











