
வீடியோ
இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சென்னை அணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதே போல டூப்ளசிஸே, தனது கிரிக்கெட் வாழ்கையில் முக்கிய அங்கமாக இருந்த சிஎஸ்கே அணிக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என மனம் உருகி வீடியோ வெளியிட்டிருந்தார்.

சிஎஸ்கேவின் செயல்
இந்த வருத்தம் கூட இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ள நிலையில் சிஎஸ்கே நன்றி மறந்து ஒரு செயலை செய்துள்ளது. அதாவது வங்கதேசத்தின் பிரபல உள்நாட்டு தொடரான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் ( BPL) தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதில் ஐபிஎல்-ஐ போலவே பல நாட்டு வீரர்களும் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

என்ன பதிவு
எனவே நாளையுடன் BPL முடிகிறது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் சிஎஸ்கேவில் இடம்பிடித்த மொயீன் அலி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளது. முன்னாள் வீரர் டூப்ளசிஸும் அதில் தான் விளையாடி வருகிறார் என்பதையே மறந்துவிட்டது.
Recommended Video

அதிர்ந்த டூப்ளசிஸ்
இதனைக்கண்டு அதிருப்தியடைந்த டூப்ளசிஸ், கமெண்ட்டில் உங்கள் பதிவில் என்னை விட்டுவிட்டீர்களே? நான் எங்கே அதில்? என்பது போல சோகமான எமோஜி ஒன்றை போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சென்னை அணி உங்களை மறந்தாலும், நாங்கள் என்றுமே மறக்கமாட்டோம் என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











