
ரசிகர்கள் சந்தேகம்
ஆர்சிபி அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இன்று தனது முதல் போட்டியில் விளையாடினார். திருமணத்திற்கு பின் அவர் ஃபார்மில் தான் இருக்கிறாரா, பேட்டிங் சிறப்பாக இருக்குமா என ரசிகர்கள் குழம்பியிருந்தனர். ஆனால் ஃபீல்டிங்கில் தனது எண்ட்ரி இன்னும் மாஸாக இருக்கிறது என நிரூபித்துள்ளார்.

சுவாரஸ்ய சம்பவம்
ஆட்டத்தின் 10வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தை திலக் வர்மா அருகில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். ஃபீல்டர்கள் தூரத்தில் இருந்ததால் ரன் ஓடிவிடலாம் என நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தூரத்தில் இருந்த மேக்ஸ்வெல் மிகவும் வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார்.

சூப்பர் மேன் தருணம்
மேக்ஸ்வெல் சூப்பர் மேனை போன்று காற்றில் பறந்துக்கொண்டிருந்த போது வீசிய அந்த பந்து துள்ளியமாக ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட் எடுத்தது. இதனால் திலக் வர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுணையாகவே இருந்தது. இவருக்கு பின்பு வந்த கெயீரன் பொல்லார்டும் டக் அவுட், ராமந்தீப் சிங் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆட்டத்தின் திருப்புமுணை
திலக் வர்மாவின் விக்கெட்டால் 50 - 1 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர் 79 - 6 என பரிதாபமான நிலைக்கு சென்றது. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனியாளாக 68 ரன்களை விளாசி மும்பை அணியின் ஸ்கோரை 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களுக்கு கொண்டு சென்றது.


Click it and Unblock the Notifications











