மும்பை: ஐபிஎல் தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் ஆர்சிபி அணி, குஜராத் டைட்ன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை செய்வதாக தெரிவித்தது.
குஜராத் அணியின் அல்சாரி ஜோசப்க்கு பதிலாக லோக்கி பெகுர்சனை பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா சேர்த்துள்ளார்.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் அணியும் பேட்டிங் செய்யவே முடிவு எடுத்ததாக டுபிளஸிஸ் கூறினார். குஜராத் அணியை 180 ரன்களுக்குள் சுருட்டினால், ஆர்சிபி அணிக்கு நல்லது.
குஜராத் அணியின் ரஷித் கான் சுழற்பந்தவீச்சை விராட் கோலி, டுபிளஸிஸ் ஆகியோர் எதிர்கொள்வதே சவாலாக இருக்கும். தற்போது ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் மைனஸ் 0.32 என ரன் ரேட்டுடன் 5வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும். டெல்லி அணி மும்பையுடன் தோற்க வேண்டும்.
இதே போன்று குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும். இல்லையெனில் ராஜஸ்தான் அணியை சென்னை வீழ்த்த வேண்டும்.
ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்