
அதிரடி ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போது களத்துக்கு வந்தார் தினேஷ் பானா. எதிர்கொண்ட நான்கே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் தினேஷ் பானா. இதன் மூலம் 260, 270 ஐ தான் இந்திய அணி தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 290 ஐ ஸ்கோர் தொட்டது.

ஃபைனல் சிக்சர்
இதே போன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், 5 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார். இதில் தோனி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்சர் அடித்தது போல், அதே ஷாட் ஆடி சிக்சர் அடித்து உலகக் கோப்பையை வென்று தந்தார்.

காரணம் என்ன?
இதனையடுத்து தினேஷ் பானாவின் பெயர் ஐபிஎல் ஏலத்தில் கடைசியில் சேர்க்கப்பட்டது. ஆனால் மெகா ஏலத்தில் அவர் பெயர் ஏல மேடைக்கு வரவே இல்லை. அதற்கு காரணம், 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஒரு ரஞ்சி போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், தினேஷ் பானா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போய்விட்டார்.
Recommended Video

பயிற்சி முகாம்
இந்த நிலையில், சூரத்தில் நடைபெறும் சிஎஸ்கே பயிற்சியில் பங்கேற்கும் படி தினேஷ் பானாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பயிற்சியில் பங்கேற்று, தோனியிடம் பாடம் கற்று வருகிறார். இதனால் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் பானாவை சிஎஸ்கே தட்டி தூக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











