சிஎஸ்கே ப்ளேயிங் 11
இனி அடுத்ததாக சென்னை அணியின் ப்ளேயிங் 11 என்னவென்பதை தான் தோனி தீர்மானிக்கவிருக்கிறார். தற்போது வரை ஓப்பனிங்கில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட் ஜோடி களமிறங்க, அவர்களின் பின்னர் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளன.
சிஎஸ்கேவுக்கு 2 வழிகள்
இந்நிலையில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷணாவும் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், " சிஎஸ்கேவுக்கு 2 வழிகள் உண்டு. டெவோன் கான்வேவை ஓப்பனிங் இறக்கினால், மொயீன் அலி, பிராவோ, ஆடம் மில்னே என 4 அயல்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் காவேவை களமிறக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு இல்லை.
என்ன காரணம்
அந்த அணியில் ராபின் உத்தப்பா சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஒருவேளை உத்தப்பா - ருதுராஜ் ஓப்பனிங் ஆடினால், ஒரு அயல்நாட்டு வீரருக்கான இடம் காலியாகும். அப்போது கூடுதலாக இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வருண் சக்கரவர்த்தியை போன்றே மஹீஷ் தீக்ஷனாவும் மிஸ்ட்ரி ஸ்பின்னராக பார்க்கப்படுகிறார்.
Recommended Video
மொத்தம் 7 பவுலர்கள்
மகாராஷ்டிரா களத்தில் வேகப்பந்துவீச்சு அதிகம் தேவைப்படும். அதற்காக தான் ஆடம் மில்னே, ராஜ்வர்தன், பிரஷாந்த் சொலாங்கி, பிராவோ என 4 வீரர்கள் உள்ளனர். பிட்ச் நிலை மாறினால் ஸ்பின்னர்களாக ஜடேஜா, தீக்ஷணா, மொயீன் அலி ஆகிய 3 பேரை வைத்து சமாளிக்க முடியம் என இர்ஃபான் கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கை வீரரை அணிக்குள் சேர்த்ததற்காக சிஎஸ்கேவுக்கு எதிராக குரல்கள் எழுந்தன. இதனை மனதில் வைத்து தான் தோனி முடிவெடுப்பார்.