
ரோகித் ஏமாற்றம்
இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி , தொடக்கத்தில் இருந்தே ரன் குவித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. எனினும் கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

நெருக்கடியில் கிஷன்
இதனால் இஷான் கிஷனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவரால் பெரிய ஷாட் ஆட முடியவில்லை. 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டர் மட்டும் அடித்து 13 ரன்களையே சேர்த்தார். ஸ்டோனிஸ் வீசிய பந்தில் போல்ட் ஆகி இஷான் கிஷன் வெளியேறினார்.

கோபம்
இதனால் கடும் கோபத்தில் வெளியேறிய இஷான் கிஷன், பெவிலியன் நோக்கி கோபமாக நடந்தார். அப்போது எல்லைகோட்டில் பேட்டால் ஓங்கி அடித்தார். இதனால் அங்கிருந்த சக அணி வீரர்களே கொஞ்சம் மிரண்டனர் இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியதால், அதன் பிளே ஆஃப் கனவு 99.9 சதவீதம் முடிந்துவிட்டது.

பிளே ஆப் கனவு
இனி நடைபெற உள்ள 8 போட்டியில் அனைத்திலும் வென்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். கடந்த சீசனிலும் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. இம்முறையாவது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என எதிர்பார்த்த மும்பை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இந்த விரக்தியால் தான் இஷான் கிஷன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் .


Click it and Unblock the Notifications











