
ஃபீல்டிங்கில் அசத்தல்
குஜராத் அணியின் பேட்டிங்கிற்கு ஹர்திக் பாண்ட்யா பெரும் உதவியாக இருந்தார். 52 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். ஆட்டத்தின் 12வது ஓவரின் போது பாண்ட்யா அடித்த ஒரு பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. பந்தை துரத்தி சென்ற ஜாஸ் பட்லர் பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து தடுத்தார்.

நடுவரிடம் ஆலோசனை
அனைவரும் அது பவுண்டரி செல்லவில்லை என நம்பினர். ஆனால் ஜாஸ் பட்லர், திடீரென கள நடுவரை அழைத்து தனது கால்கள் பவுண்டரியை தொட்டுவிட்டதா? என்பது உறுதி செய்யவும் என கேட்டார். இதன்பின்னர் தான் நடுவரே 3வது நடுவரை அனுகினார். இறுதியில் பட்லர் பவுண்டரி எல்லையை தொட்டது தெரியவந்தது. ராஜஸ்தான் அணிக்கு 4 ரன்கள் கூடுதல் இலக்கானது. அவரின் இந்த மனது ரசிகர்களை கவர்ந்தது.

ஆரஞ்ச் கேப் பெருமை
இதே போல நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 87 ரன்கள் அடித்த மூலம் நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரரானார். எனவே ஏற்கனவே முதலிடத்தில் இருந்த பட்லர், களத்திலேயே தனது ஆரஞ்ச் தொப்பியை கழற்றினார். போட்டியின் போது எந்தவொரு வீரரும் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் வேறொருவர் முந்திவிட்டார் என தெரிந்த அடுத்த நொடியே தனக்கு பெருமை வேண்டாம் என முடிவெடுத்தார். இது ரசிகர்கள் மனதை பெரிதாக வென்றது.
அரைசதம் விளாசல்
ஃபீல்டிங்கில் அசத்திய ஜாஸ் பட்லர், பேட்டிங்கிலும் அட்டகாசம் செய்தார். ராஜஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பிய போதும், ஜாஸ் பட்லர் மட்டும் 24 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.


Click it and Unblock the Notifications