
முதல் விக்கெட் சர்ச்சை
இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களுக்கும், அபிசேஷ் சர்மா 9 ரன்களுக்கும் நடையைக்கட்டனர். அவர்களின் பின்னர் வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரண் இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். இதில் வில்லியம்சனின் விக்கெட்டை தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மிஸ்ஸான கேட்ச்
ஆட்டத்தின் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை வில்லியம்சன் தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் சற்று பவுன்சானதால் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பிங்கில் நின்றிருந்த சஞ்சு சாம்சன் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார். எனினும் வேகத்தில் பந்து, கை நழுவியது.

திடீர் திருப்பம்
சஞ்சு சாம்சனின் கைகளில் பட்டு எகிறிய பந்தை, ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த தேவ்தத் பட்டிக்கல் டைவ் அடித்து பிடித்தார். இது வழக்கமாக அனைவரும் செய்வது தான். ஆனால் பந்து முதலில் தரையில் பட்ட பின்பு தான் பட்டிக்கல் பிடித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. வீடியோவை சூம் செய்து பார்த்த போதும், பந்து முதலில் தரையில் பட்டது போன்றே இருந்தது.
Recommended Video

சர்ச்சை முடிவு
பல ஆங்கிளில் வீடியோவை பார்த்த 3வது நடுவர், அவுட் கொடுப்பதாக அறிவித்தார். இது ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது. ஒரு அணியில் வில்லியம்சன் போன்ற கேப்டனின் விக்கெட் மிக முக்கியமானது. ஆனால் அதனை நன்கு ஆராயாமல் 3வது நடுவர் செய்தது பெரும் தவறு என ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். வில்லியம்சனுக்கு பிறகு வந்த எந்த வீரரும் சரியாக சோபிக்காததால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications











